பிரபல நகைக்கடை ரூ.100 கோடி மோசடி விவகாரம்..நடிகர் பிரகாஷ் ராஜூக்கு சம்மன்

Update: 2023-11-24 02:58 GMT

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரியில் முதலீடு செய்பவர்களுக்கு இரண்டு சதவீதம் வட்டி தருவதாக விளம்பரங்கள் செய்துள்ளனர். அதை தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் பலர் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், உறுதியளித்தபடி வட்டி தராத நிலையில், திருச்சி உள்ளிட்ட அனைத்து கிளைகளும் மூடப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களும் தலைமறைவாகினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிறுவன விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்க துறையினர் அடுத்த மாதம் 5ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்