ஜட்ஜ் பெயரை வைத்து கேம் ஆடிய குமாஸ்தா - திருப்பூரில் பரபரப்பு

Update: 2023-10-27 02:51 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பண மோசடியில் ஈடுபட்ட குமாஸ்தா கைது செய்யப்பட்டார். சித்ராவுத்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் கைதியாக இருந்தார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் வாங்க நீதிபதிக்கு பணம் தர வேண்டுமெனக் கூறி அவரது தாயாரிடமிருந்து குமாஸ்தா ஸ்டீஃபன் என்பவர் பணம் பெற்றுள்ளார். இதனிடையே, குமாஸ்தா ஸ்டீஃபன் பண மோசடியில் ஈடுபட்டதை அறிந்து கொண்ட சாமிக்கண்ணு, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் புகாரளித்துள்ளார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்டீஃபன் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஸ்டீஃபனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்