7வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் - இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை

ஒசூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-02 04:58 GMT
ஒசூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அருகே மிட்டப்பள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்த சின்னபையன் என்பவர், வேன் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் ராயக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவும் அளித்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் இளைஞரை கைது செய்து சிறையில் தள்ளினர். 
Tags:    

மேலும் செய்திகள்