மின்துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா? - தமிழக அரசு மீது எல். முருகன் குற்றச்சாட்டு

மின்துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா? - தமிழக அரசு மீது எல். முருகன் குற்றச்சாட்டு

Update: 2021-06-26 21:41 GMT
மின்துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா? - தமிழக அரசு மீது எல். முருகன் குற்றச்சாட்டு 
 
தமிழக அரசு மின்சாரத்துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக சார்பாக,  முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் அய்யப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் எல். முருகன் கலந்து கொண்டு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்களை வதைக்காத வகையில் மின்கட்டணத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறினார். தமிழக அரசு மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு முயற்சிக்கிறதா அல்லது தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க திட்டமிடுகிறதா என்று நினைக்க தோன்றுவதாக எல். முருகன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்