மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி - சொத்தை அபகரித்த அக்காள் - மழையிலும், வெயிலும் தவிக்கும் இளைஞர்

மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து கொண்டு, அவரை வீட்டை விட்டு துரத்தி அனாதையாக தவிக்க விட்ட சோக சம்பவம், கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.

Update: 2021-06-08 12:33 GMT
மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து கொண்டு, அவரை வீட்டை விட்டு துரத்தி அனாதையாக தவிக்க விட்ட சோக சம்பவம், கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் மேல கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஜெனிஸ் , மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது சகோதரி ஆமிலின் மதிஷா கல்லூரி காலத்தில் ரமேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டு பெற்றோர் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்த‌தாக தெரிகிறது.அதன் பின்னர் 2 குழந்தைகளுக்கு தாயான மதிஷா சிரம படுவதை கண்ட அவரது தாய் சரஷ்வதி, தங்கள் சொத்தில் 33 சென்ட் நிலத்தை மகன் ஜெனிஷிற்கும், மீதமுள்ள 30 சென்ட் நிலத்தை மகள் மதிஷாவிற்கும் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாய் சரஸ்வதியும் உயிரிழக்கவே, மதிஷாவும் அவரது கணவரும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஜெனிஷிடம் கையெழுத்து பெற்று மொத்த சொத்தையும் வளைத்து போட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஜெனிஸ் தங்குவதற்கு இடம் கூட கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். தந்தை தாய் பராமரிப்பில் ராஜா போல வாழ்ந்த இளைஞர் ஜெனிஷ், மழையிலும் வெயிலிலும் ஒதுங்க கூட இடமின்றி தவிப்பதை கண்ட அப்பகுதி மக்கள், அவ்வப்போது உணவு வழங்கி செல்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்