சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல்... ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-08 13:43 GMT
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏர் இந்தியா விமானத்தில் வந்த இரண்டு பயணிகளை சோதனையிட்டபோது, அவர்களின் உடலில் மறைத்து வைத்திருந்த, ஆயிரத்து ஐநூறு கிராம் தங்க நகைகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்