பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்க கோரிக்கை - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-11-07 13:44 GMT
தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2-ம் தேதி இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நவம்பர் 30 வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்து என்ன என்ற விளக்கத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்