இருளர் சமூக மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
இருளர் சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இருளர் சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திண்டிவனத்தை அடுத்த டி. பரங்கனி கிராமத்தில் வசிக்கும் இருளர் சமுதாயத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ராஜேந்திரன் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.