ரஷ்யாவில், தமிழக மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ரஷ்யாவில், வோல்கா ஆற்றில் குளித்த போது உயிரிழந்த 4 தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-10 13:43 GMT
ரஷ்யாவில், வோல்கா ஆற்றில் குளித்த போது உயிரிழந்த 4 தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்கள் ஆஷிக், விக்னேஷ், மனோஜ், ஸ்டீபன் ஆகிய நான்கு மாணவர்களும் உயிரிழந்தது மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்