சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காளிபாளையம், ஆலம்பாளையம் பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காளிபாளையம், ஆலம்பாளையம் பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. மலையப்பன் என்பவரது தோட்டத்தில் தென்னை மரத்தில் இடி விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. கோவிந்தாபுரத்தில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.