கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்...

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2020-04-30 18:00 GMT
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது. கடைசி நபரான வேதாச்சலம் புரத்தை சேர்ந்த 35 வயது பெண்ணை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆட்சியர் அன்பழகன் வாழ்த்து கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தற்போது திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 14 நபர்கள் மட்டும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்