144 தடை உத்தரவால் பொம்மை உற்பத்தியாளர்கள் பாதிப்பு - அரசு உதவி செய்ய கோரிக்கை

144 தடை உத்தரவு காரணமாக வெளிநாடுகளுக்கு பொம்மைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் கடலூரில் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2020-04-25 07:11 GMT
கடலூர் அருகே பழைய வண்டிப்பாளையத்தில் தயாரிக்கப்படும் பொம்மைகள் மிகவும் புகழ்பெற்றவை. 3 தலைமுறைகளாக  களிமண்ணை கொண்டு தயாரிக்கப்படும் அழகிய பல வண்ண பொம்மைகள் இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும்  விற்பனைக்காக  அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, குடிசை தொழிலான பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்