அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்

மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.

Update: 2020-03-28 10:53 GMT
இன்று காலை முதல் வழக்கம் போல் சந்தைக்கு வந்த மக்கள், தங்களுக்கு தேவையான காய்கனிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல், அலட்சியமாக நின்றிருந்தனர். இதை பார்த்து கொதித்தெளுந்த நகராட்சி அதிகாரிகள், ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்குமாறு கடுமையாக எச்சரித்தனர். கொஞ்சமும் பொருட்படுத்தாமல், மக்கள் நின்றிருந்ததால் கோபம் அடைந்த அதிகாரிகள், காய்கறி கடைகளை இழுத்து மூடி பூட்டுபோட்டனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்