வரதராஜ பெருமாள் தெப்ப உற்சவ திருவிழா - 20 கிராம மக்கள் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலய தெப்போற்சவ திருவிழா நடைபெற்றது.

Update: 2020-03-06 07:32 GMT
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலய தெப்போற்சவ திருவிழா நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், வரதராஜபெருமாள் தென்னேரி ஏரியில்  மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், சுவாமியை தரிசித்தனர். தெப்ப உற்சவத்தின் நிறைவாக வாணவேடிக்கைகள் களைகட்டின. 

Tags:    

மேலும் செய்திகள்