தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் : கரடிகளை விரட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக புகும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2020-02-27 21:41 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக புகும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேத்தரீன் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையின் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் தேடி 3 கரடிகள் புகுந்தன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து கரடிகளை விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்