எமனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்

மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்த அய்யாவு என்பவர் இறந்ததை தாங்கமுடியாத அவரது உறவினர்கள் தங்களது எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர்.

Update: 2020-02-27 21:39 GMT
மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்த அய்யாவு என்பவர் இறந்ததை தாங்கமுடியாத அவரது உறவினர்கள் தங்களது  எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர். " சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம்" என்ற கண்டன வாசகங்களோடு மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான மேலமாசி வீதி, கோரிப்பாளையம், செல்லூர் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் தங்கள் விநோதமான பெயர்களையும் அச்சிட்டுள்ளனர். பல்வேறு கண்டன போஸ்டர்களை பார்த்த மதுரையில், எமனுக்கே அடித்த கண்டன போஸ்டரை மதுரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்