"சீனாவில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா வைரஸ்"

சீனாவில் இருந்து சென்னை வந்த சீன நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2020-02-02 02:45 GMT
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீன நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வழியாக சீனாவை சேர்ந்த லியோ விஜின் என்பவர், சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா  வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்