"நியாயவிலைக்கடையை திறந்து வைத்த அமைச்சர்"
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவு;
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த அரசம்பாளையம் காலணியில் பகுதி நேர நியாய விலைக்கடையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இதையடுத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து குடிமராமத்து பணியை ஆய்வு செய்த அமைச்சரிடம், ஏரியின் தென்புரக்கரையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.