"நீட் ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு மாணவன்"

தந்தையுடன் தலைமறைவாகிய மாணவனுக்கு வலைவீச்சு

Update: 2019-11-08 20:07 GMT
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த புகார் பட்டியலில்  சென்னை மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவரும் இணைந்துள்ளார். மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு மர்ம நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலை கொண்டு கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்திருந்தது. இதன் படி, தந்தையுடன் தலைமறைவாகிய மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தரகரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்