மேகதாது அணை கட்டும் விவகாரம் : மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

மேகதாது அணை கட்டும் கோரிக்கையின் மூலம் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் ஆதாயம் தேடுவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-10-07 12:20 GMT
மேகதாது அணை கட்டும் கோரிக்கையின் மூலம் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் ஆதாயம் தேடுவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்டை மாநில உறவை எடியூரப்பா சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறினார். எனவே, மேகதாது அணை குறித்த தனது நிலைப்பாட்டை மத்திய  அரசு, தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க,  ராசி மணலில் அணை கட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பி. ஆர். பாண்டியன் கேட்டுக் கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்