ரோந்து பணியின்போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் : சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2019-09-16 21:35 GMT
சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த தாயம்மாள் நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ், சி.ஆர்.பி.எஃப்-ல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். ஸ்ரீநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தாயம்மாள் நகருக்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்