10ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - இளைஞர் கைது

திருச்சி அடுத்த நாகமங்கலத்தில் 10ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2019-08-18 12:44 GMT
திருச்சி அடுத்த நாகமங்கலத்தில் 10ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். டைல்ஸ் கடையில் பணியாற்றிய ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த சர்மா என்பவன், சக தொழிலாளியின் மகளிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்துள்ளார். திடீரென மாணவியை கடத்திய அவர், பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், மாணவியை வீட்டில் விட வரும்போது உண்மை தெரிந்த சிறுமியின் உறவினர், ஜெய்ப்பூர் இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வடமாநில நபர்களால், கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்  பெருகி வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்