மல்லிகேஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றிய விஸ்வகர்மா சமுதாயத்தினர்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி இன்று பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.

Update: 2019-08-15 10:42 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி இன்று பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.  தமிழக அரசின் தலைமை ஸ்தபதி தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பகுதியில் சிற்ப வேலை செய்யும் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தினர் கலந்துகொண்டு பழைய பூநூலை அகற்றிவிட்டு, காயத்ரி அம்மன் முன்பு யாகம் நிகழ்த்தி புதிய பூணூலை அணிந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்