அழகிப் போட்டி நடத்துவதாக கூறி மோசடி என புகார் : மாடல் அழகி, மீரா மிதுனுக்கு நிபந்தனை முன் ஜாமின்

மாடல் அழகி, மீரா மிதுனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-19 03:44 GMT
மாடல் அழகி,  மீரா மிதுனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அழகி போட்டி நடத்த வசூலித்த 50 ஆயிரத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக மீரா மிதுன் மீது ரஞ்சித் பண்டாரி என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் போலீசார், தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சி,  மீரா மிதுன் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி , 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை செலுத்தி முன்ஜாமின் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்