விபத்தில் புதுமாப்பிள்ளை மரணம் : திருமணமான 2 நாளில் நடந்த விபரீதம்...

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வாளாடிசிவன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மோகன் - ரமணி தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர்.

Update: 2019-07-17 03:37 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வாளாடிசிவன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மோகன் - ரமணி  தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர். கடந்த 14 ஆம் தேதி திருமணம் ஆன அவர்களுடன், நண்பர் ரஞ்சித்தும் அந்த வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் மோகனும் ரஞ்சித்தும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த புதுப் பெண் ரமணி  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்