வேலூர் : போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

Update: 2019-06-27 11:46 GMT
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இடைத் தரகர்கள் மூலம் பணம் வசூல் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சரவணகுமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. தற்போது அங்கு, கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்