தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அஞ்சலி செலுத்த புறப்பட்ட சுப.உதயகுமார் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-22 09:35 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க, அதிகாலையில் நகர்கோவிலில் உள்ள தனது வீட்டிலிருந்து உதயகுமார் புறப்பட்டார். அப்போது, கோட்டார் போலீசார் அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தனக்கு அறிமுகமானவர்கள் அந்த போராட்டத்தில் பலியான நிலையில், அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த சென்ற சுப. உதயகுமாரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என அவரது மனைவி மீரா உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்