தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, இறந்தவர்களுக்கு குமரெட்டியாபுரம் கிராமமக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-05-22 04:50 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, குமரெட்டியாபுரம் கிராமத்தில், ஊர்பொது இடத்தில், இறந்தவர்களின் புகைப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மழலை முதல் முதியவர்கள் வரை கருப்பு உடை அணிந்து, பொதுஇடத்தில் ஒன்று திரண்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறிது நேரம் முழக்கம் எழுப்பிய அவர்கள், இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்