செல்போன் கடையில் துளையிட்டு கொள்ளை : போலீசார் விசாரணை..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.

Update: 2019-05-16 12:02 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்படும் ஜமாலுதீன் என்பவரது செல்போன் கடையின் கிரில் கதவை மர்ம நபர்கள் துளையிட்டனர். அப்போது உயர்தர செல்போன்கள் மற்றும் ரொக்கம் ஒன்றரை லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.  இது குறித்து கோபி காவல்துறையினர் சிசிடிவி படக்காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

Tags:    

மேலும் செய்திகள்