திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு - 15 காளைகள், 150 வீரர்கள் பங்கேற்பு

சிவகங்கை அருகே மகாமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2019-03-09 22:10 GMT
சிவகங்கை அருகே மகாமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வடமாடு  மஞ்சுவிரட்டு  நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. வட்டவடிவமாக அமைக்கப்பட்ட திடலில் காளைகளை அடக்க 150 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு, கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 10 க்கும் மேற்பட்டவர்களுக்கு காயமும்  ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்