லாரி மீது பைக் மோதி விபத்து தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் - ஒருவர் பலி

சென்னை போரூர் அருகே, இரு சக்கர வாகனம் ஒன்று லாரி மீது மோதி தீப்பற்றியதில், ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்

Update: 2019-03-09 12:52 GMT
சென்னை தாம்பரத்திலிருந்து மதுரவாயல் நோக்கி பைபாஸ் சாலையில், இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, லாரி மீது பைக் திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்,பைக் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த பூந்தமல்லி தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்தனர். இதனிடையே, பைக்கை, ஓட்டி வந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த நபர்,காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்தில் உயிரிழந்த நபர் எம்.கே.பி. நகரை சேர்ந்த ராஜ்குமார் என்ற அபிஷேக் என்பதும், அவர் கல்லூரி மாணவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்