தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் எத்தனை? - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்கிற்கு விநியோகம் செய்யப்படும் மதுபானம் எவ்வளவு?

Update: 2019-03-06 19:57 GMT
தமிழகத்தில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எத்தனை? அங்கு தயாரிக்கப்படும் மதுபானங்களில் எவ்வளவு டாஸ்மாக்கிற்கு விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகரை சேர்ந்த காந்திராஜன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழகத்தில் எத்தனை மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன? இதில் எவ்வளவு மதுபானங்கள், டாஸ்மாற்கிற்கு  விநியோகம் செய்யப்படுகிறது?  என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்