பொதுத் தேர்வு குறித்து 2 நாளில் 40 புகார்கள் : உடனுக்குடன் தேர்வுத்துறை நடவடிக்கை

இரண்டு நாட்கள் நடந்த பொதுத்தேர்வு குறித்து, 40 புகார்கள் தேர்வுத்துறை அமைத்துள்ள கட்டுப்பாட்டறைக்கு வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-03-05 19:39 GMT
இரண்டு நாட்கள் நடந்த பொதுத்தேர்வு குறித்து, 40 புகார்கள் தேர்வுத்துறை அமைத்துள்ள கட்டுப்பாட்டறைக்கு வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு தொடர்பான குறைகள், பிரச்னைகளை, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் இயங்கக் கூடிய தேர்வு கட்டுப்பாட்டறை, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு அறையில் போதிய வசதி இல்லை உள்பட பல புகார்கள் வந்தன. இந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்