கருப்பனார் கோவிலில் விடிய, விடிய முப்பூஜை

ராசிபுரம் அருகே கருப்பனார் கோவிலில் விடிய, விடிய முப்பூஜை

Update: 2019-02-10 22:05 GMT
ராசிபுரம்  அருகே கருப்பனார் கோவிலில் விடிய, விடிய முப்பூஜை நடைபெற்ற நிலையில், அங்கு சுமார்  4000 பேருக்கு சமபந்தி கறி விருந்து பரிமாறப்பட்டது. ஆர்.புதுப்பட்டியில் உள்ளது கல்லவழி கருப்பனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டனர். 200 கிலோ ஆடு, 50 கிலோ கோழி, 450 கிலோ பன்றி   இறைச்சி மற்றும் 500 கிலோ பச்சரிசி கொண்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விடிய, விடிய சமபந்தி  விருந்து வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்