திம்பம் மலைப்பாதையில் புதிய போக்குவரத்து விதிமுறைகளால் பயணிகள் தவிப்பு

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் புதிய போக்குவரத்து விதிமுறைகளால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுகின்றனர்.

Update: 2019-02-09 07:12 GMT
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் புதிய போக்குவரத்து விதிமுறைகளால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுகின்றனர். இங்கு இரவு நேரங்களில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வெகு நேரம் உண்ண உணவின்றி காத்திருக்கு சூழல் அதிகரித்துள்ளது. காலையில் ஒரே நேரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை கட்டுப்படுத்த, இரவில் சிறிய ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்