ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-06 20:17 GMT
காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் காவிரி  ஆற்றங்கரையில் 50 ஏக்கர்  அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால், தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். . இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு, இது குறித்து தமிழக அரசு வரும் 28ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்