இருசக்கர வாகன விற்பனையகத்தில் புகுந்த பாம்பு

இருசக்கர வாகன விற்பனையகத்தில் திடீரென பாம்பு ஒன்று துள்ளி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-30 03:08 GMT
திண்டுக்கல்லில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் திடீரென பாம்பு ஒன்று துள்ளி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்களை சுத்தப்படுத்தும் போது, வாகனத்தின் உள்ளிருந்து இந்தப் பாம்பும் விழுந்தது. இதனால், அச்சமடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவலின் பேரில் வந்த அருகில் இருந்தவர்கள், பாம்பை லாவகமாக பிடித்து வெளியேற்றினர். இதனால், அங்கு  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
Tags:    

மேலும் செய்திகள்