கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவன் கொலை

ஈரோட்டில், கள்ளக்காதல் விவகாரத்தால், வெல்டிங் பட்டறை உரிமையாளரை கொலை செய்த கள்ளக்காதலுனும், அதற்கு உடந்தையாக இருந்த மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2019-01-22 03:10 GMT
அந்தியூரில், கழுத்து அறுபட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் அறிந்து போலீசார்  விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்டவர் வெல்டிங் பட்டறை வைத்திருக்கும் கைலாசம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவரது மனைவிக்கும் திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது.. 

கள்ளக்காதலுக்கு  கைலாசம் இடையூராக இருந்ததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் ஆனந்த் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து ஆனந்த் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி ஹேமலதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்