சாலை ஓரம் சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து

சிறுமி பலி - 2 வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்

Update: 2019-01-20 18:05 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-உடுமலை சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று தாராபுரம்  கள்ளிவலசு அருகே சாலையின் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஜனவர்த்தினி உயிரிழந்தார்.  2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.  காரில் வந்தவர்கள்  தப்பியோடிய நிலையில்,  விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த வழியாக வந்த கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்