தனியார் மருத்துவமனை உணவில் புழு

பழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-01-03 12:36 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை ஒன்றில், கடந்த ஆறுமாதங்களாக சுப்புலட்சுமி என்ற கர்ப்பிணி பெண் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் இன்று காலை அவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்துள்ளன. அதுகுறித்து, அவரது கணவர் சதிஷ் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அலட்சியமாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உணவில் புழுக்கள் இருந்தது குறித்து உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சதீஷ் புகார் அளித்தார். மருத்துவமனையில் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில், சமையல் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற மளிகைப் பொருட்களை கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்