இந்தோனேஷிய பெண்ணுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு
மசாஜ் சென்டர் வழக்கு ஒன்றில், இந்தோனேஷிய பெண்ணுக்கு, இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
மசாஜ் சென்டர் வழக்கு ஒன்றில், இந்தோனேஷிய பெண்ணுக்கு, இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசார் சோதனை நடத்திய போது, மசாஜ் சென்டர் உரிமையாளர் மீது விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், அங்கு பணியாற்றி வந்த இந்தோனேஷியா பெண் உள்ளிட்டோரை பாதிக்கப்பட்ட நபர்களாக குறிப்பிட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.
அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தனக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, இந்தோனேஷிய பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல, தங்களை விடுவிக்க கோரி மற்ற பெண்களும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்களும் வழக்கு தொடர்ந்தனர்.
அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மசாஜ் சென்டர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்தோனேஷிய பெண்ணுக்கு இரண்டரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட அவர், அந்த தொகையை நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரிடம் இருந்து பிடித்தம் செய்து கொள்ளவும் உத்தரவிட்டார்.