சம்பள முரண்பாடுகளை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Update: 2018-12-25 10:49 GMT
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். சம்பள முரண்பாடு தொடர்பாக தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறிய ஆசிரியர்கள், உறுதியளித்தபடி தமிழக அரசு இதுவரை நடந்துகொள்ளவில்லை என்றனர். தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்