ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்திய யானை

வாணியம்பாடியில், ஜெயலலிதா படத்துக்கு, யானை ஒன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியது.

Update: 2018-12-05 08:12 GMT
வாணியம்பாடியில், ஜெயலலிதா படத்துக்கு, யானை ஒன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத்குமார், அதிமுக நகர செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பாகனுடன் சென்று கொண்டிருந்த யானை ஒன்று, அங்கு வந்து ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியது. மேலும், ஜெயலலிதா படத்தையும் தும்பிக்கையால் தடவியது. இது, அங்கிருந்த மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்