ஏலச்சீட்டு நடத்தி ரூ. 60 லட்சம் மோசடி - தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க கோரிக்கை

ஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்க கோரி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2018-12-01 21:17 GMT
ஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கண்டுபிடிக்க கோரி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குறியாமங்களம் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி, அவரின் மனைவி ஜெயந்தி, மகன் வெங்கடேசன் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் அக்கிராமத்தை சேர்ந்த பலர் பணம் கட்டி வந்துள்ளனர்.  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீட்டு கட்டியவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் வரை பணம் தராமல் மோசடி செய்து விட்டு குருமூர்த்தி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்