பள்ளிகளுக்கு நிதி உதவி குறைக்கப்பட்ட விவகாரம் : நாராயணசாமி குற்றச்சாட்டு - கிரண்பேடி மறுப்பு

புதுச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி உதவி குறைக்கப்பட்டதற்கு ஆளுநர் தான் காரணம் என முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி இருந்தார்.

Update: 2018-12-01 04:50 GMT
புதுச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி உதவி குறைக்கப்பட்டதற்கு ஆளுநர் தான் காரணம் என முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆளுநர் கிரண்பேடி, ஆளுநர் மாளிகை காரணமல்ல, புதுச்சேரி அரசுதான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், நிதி நிலை அறிக்கையில் போதுமான நிதியை அரசு ஒதுக்காததால் அப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் ஜூன் வரை வழங்க வேண்டிய நிதிக்கான கோப்புகளை, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று தான் முதலமைச்சர் அலுவலகம் அனுப்பி வைத்ததாகவும் கிரண்பேடி  குற்றஞ்சாட்டி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்