ஈரோட்டில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா

ஈரோட்டில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா

Update: 2018-11-13 15:59 GMT
10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், ஈரோடு ஆட்சியர் கதிரவன் கலந்து கொண்டு 10 மாணவ, மாணவிகளுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் கல்வி நிதியை வழங்கினார். 'தினத்தந்தி' சார்பில் வழங்கப்பட்டு உள்ள இந்த கல்வி நிதியானது, தங்களின் மேல்படிப்பை தொடர மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்