சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சி : ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இன்று ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 10 பெண்கள் அடங்கிய குழுவினர் மலையேற முயற்சித்தனர்.

Update: 2018-10-21 14:04 GMT
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இன்று ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 10 பெண்கள் அடங்கிய குழுவினர் மலையேற முயற்சித்தனர். அவர்களுள் 2 பேர் பம்பையில் வழிமறித்து திருப்பி அனுப்பப்பட்டனர். ஒருவர் சன்னிதானம் அருகே சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.  இதேபோல், புஷ்பலதா என்ற பெண் சன்னிதானத்துக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டார். பம்பை திரும்பியபோது, ஏராளமானோர் அவரை எதிர்த்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 50 க்கும் அதிகமான போலீசார், அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்