கற்றல் என்பது தேர்வு எழுதுவதற்காக மட்டும் இருக்கக்கூடாது - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து முடிவுசெய்ய முழுஉரிமை தரவேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-10 01:08 GMT
கற்றல் என்பது வெறும் தேர்வு எழுதுவதற்காக மட்டும் இருக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கத்தில்  நடைபெற்ற டி.ஏ.வி மகளிர் பள்ளியின் 47 வது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பெற்றோர்கள், மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து முடிவுசெய்வதற்கு முழு உரிமையை தரவேண்டும் எனவும்,  கலாச்சாரம் குறித்து மாணவர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்