இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பன்றி

தனுஷ்கோடி பகுதியில் அரிய வகை கடல் பன்றி இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

Update: 2018-09-28 22:21 GMT
தனுஷ்கோடி பகுதியில் அரிய வகை கடல் பன்றி இறந்து கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 5 அடி நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட இந்த கடல் பன்றி குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் கடல் பன்றியை கைப்பற்றினர். பிரேத பரிசோதனையின் போது வால் பகுதியில் வெட்டுக்காயம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கடல் பன்றி வேட்டையாடப்பட்டிருக்கலாம் அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி வால் பகுதி அறுந்து நீந்த முடியாமல் இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  
   
Tags:    

மேலும் செய்திகள்