இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - 150 மாடுகள் பங்கேற்றன

தேனி மாவட்டம் கூடலூரில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2018-09-26 11:24 GMT
தேனி மாவட்டம் கூடலூரில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.  கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பந்தயத்தில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து மாடுககள் மற்றும் வண்டி ஓட்டிகள் கலந்து கொண்டனர். தேன்சிட்டு, பெரியமாடு, நடுமாடு என 7 வகையான 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பந்தயத்தில் பங்கேற்றன. கூடலூரிலிருந்து, லோயர் கேம்ப் வரை 7 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பந்தயம் நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்